கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கலிலும் , 7 ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலும் ஆய்வு நடத்த இருக்கிறார், இங்கு உள்ள மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது , மேலும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விவசாய சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.