தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பை குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் ஜீலை 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அப்படி உள்ள சூழலிலும் தொற்று அதிகமாக உள்ளது. பொதுபோக்குவரத்துக்கு கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியும் ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்று கூறியிருந்தார். எனவே ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.