தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர் நடத்தப்படவேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும்.இதனால், 6 மாத கணக்கு டிசம்பரில் முடியும் நிலையில், ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார்.
இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாத்திற்கு மார்ச் 9 ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம், ஏப்ரல் 9 ம் தேதி வரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்து. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டு, பின்பு அவசர அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24 ம் தேதி முடிக்கப்பட்டது. எனவே 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பதால், குளிர்கால கூட்டத் தொடர் செப் 24ம் தேதிக்குள் கட்டாயம் நடத்த இருப்பதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் செப் 23-ம் தேதிக்குள் சட்டப்பேரவை குளிர்கால கூட்டம் நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.