மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி மதுரையைச்சேர்ந்த ஒருவர் 2020 விதைகளால் கொண்டு அப்துல் கலாம் ஓவியம் ஒன்றை வரைந்துஅனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
மதுரை செனாய் நகர் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மதுரையில வீடு வீடாக தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவுநாளையொட்டி, அப்துல்கலாம் லட்சிய ஆண்டாக கருதிய 2020 என்பதை தெரியப்படுத்தும் விதமாக, கொடிக்கா விதை, சீத்தாப்பழ விதை, குதிரைக்குழம்பு விதை, சீயக்காய் விதை, வேங்கை மரம், புளிய மரம் உள்ளிட 7 வகையான விதைகளை கொண்டு 2020 விதை முலம் அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.
தன்னார்வலரான அசோக்குமாரின் இந்த படைப்புக்கு சமூக வலைதளங்களில் பல பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளன.