சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடை முறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பாக கோவை உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்மூலம், ஐ.நாவின் சுற்றுச்சூழல் பேரவை மற்றும் அதன் துணைஅமைப்புகளில் ஈஷா அறக்கட்டளை பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.மேலும், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் குழுக்களின் சந்திப்புகளில் பங்கேற்பது, பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்கும் பணிகளில் ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்கும் என கூறப்படுகிறது .
இதையடுத்து சத்குரு தனது ட்விட்டர் ஒர் பதிவு வெளியிட்டு இருந்தார்,அதில் ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்க ஈஷா அறக்கட்டளைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறி இருந்தார்.
ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கம் தற்போது இரு களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவிரி நதிக்குப் புத்துயிரூட்ட தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘காவேரி கூக்குரல்’ திட்டமும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘வஹாரி’ நதி புத்துயிரூட்டும் திட்டமும் இந்த அறக்கட்டளை செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..