டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார சரிவை சரிக்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது அதில் எடுத்த முக்கிய அறிவுப்புகளை பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.
பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம்:-
வரும் நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி, கோதுமை, பருப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்தையொட்டி பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,இத்திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 74.3 கோடி பேரும் மே மாதத்தில் 74.75 கோடி பேரும் ஜூன் மாதத்தில் 64.72 கோடி பேரும் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டம்:-
இதை அடுத்து லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. . இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அரசு அறிவித்த மூன்று மாத சலுகை ஜூன் மாதத்துடன் முடிந்தது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது , இந்த திட்டத்தின் மூலம். 7.4 கோடி ஏழை பெண்கள் பயனடைவர் இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ13,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
பிஎப் தொகையை:-
லாக்டவுன் அமலில் இருப்பதால் தொழிலாளர்களின் 3 மாதங்களுக்கான 24% பிஎப் தொகையை (நிறுவனங்களின் 12%; தொழிலாளர்களின் 12% பங்கு) ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசே செலுத்தும் இதனால் 72 லட்சம் பேர் பயனடைவர் என்றும், இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 4,860 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதிலும் சில கட்டுப்பாடுகளை அமைச்சரவை விதித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 90% பேரின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வரை மட்டுமே பணியாற்ற வேண்டும் . இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று அமைச்சரை தெரிவித்துள்ளது.
இன்சூரன்ஸ்:-
இதை அடுத்து மத்திய அரசின் மூன்று முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்களான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றுக்கு மூலதன முதலீடாக ரூ. 12,450 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் திட்டம்:-
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு பொது முடக்கத்தில் உள்ளது. இதனால், மக்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்து, இடம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க மத்திய அரசு பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இடம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்காக நகர்ப்புறங்களில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 107 நகரங்களில் 1,08,000 வீடுகள் வாடகைக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார
இவ்வாறு பல வகையான ரேசன் திட்டங்களையும, நிதி உதவி திட்டங்களை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒருங்கினைக்கும விதமாக மத்திய அரசு தெரிவித்து இருப்பது பலரின் வரவேற்ப்பை பெற்று வருகிறது.