ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலியுகத்தின் ஆளும் தெய்வமாக கோடிக் கணக்கான பக்தர்களால் நம்பப்பகிற தெய்வம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஏழு மலைகளில் இடையே கம்பீரமாக வீர்றிரக்கிறார். பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் இங்கே நிறைவேறுவதால் தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரலாக வருகின்றார்கள்!
உலக முழுவதும் இருக்கும் பலகோடிக்கான பக்தர்களால பெரிதும் வணங்கப்படும் தெய்வமான திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில பக்கதர்கள் உண்டியலில் போடும் காணிக்கை பல கோடியை எட்டுகிறது. இதை தவிர பக்தர்கள் நன்கொடை அளிக்கும் ஆபரணங்கள் / விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளிலிருந்து வரும் பல கோடி வருமானமும் , ஆந்திர மாநிலத்தின் பல நலத்திட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் அங்கே கோயில் திருபணிக்கா மதச்சார்பற்ற ஹிந்துக்கள் அல்லாதவர்களும் ஊழியர்களாக அரசால் நியமிக்கப்படுகிறார்கள், தமிழகத்தில் அறநிலையத்துறை என்ற அரசு சார் துறையில் உள்ள கோயில்களைப் போலவே, திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தனது செல்வாக்கை ஆளும் அரசுகளே கொள்ளையடிப்பதற்கு எதுவாக மதச்சார்பற்ற ஊழியர்களை அரசு நியமித்து வருகிறது , இதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டில் அங்கு மோசடி நடந்து , சமூக ஊடகங்களில் அது மிகப் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது,இதையடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஹிந்து அல்லாத ஊழியர்கள் இடமாற்றம் செய்யும் சட்டம் செயல் முறைக்கு வந்தது,
இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியது , அதில் மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது , ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள செயின்ட் பால் லூத்தரன் சர்ச்சில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களின் ஏஇஓ வான ஏ.ராஜசேகர் ராவ் சர்ச்சில் பிரார்த்தனை செய்வதான வீடியோ ஒன்று வெளியாகியது , அதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின .
அதவாது திருமலை-திருப்பதி ஆலயத்துக்குள் உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பில் இருந்த ஏ.ராஜசேகர் ராவ் , இவர் ஹிந்து என்றும் அவரது மனைவி கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டர் என்று அவர் கூறினார், மேலும், தாம் புத்தூர் சர்ச்சில் பிரார்த்தனை செய்வதாக வெளியான தகவலை அவர் மறுத்தார். எனினும், அவர் மதம்மாற்றப்பட்ட தமது மனைவியுடன் கோயிலின் வளாகத்திற்குள் நுழைந்தார். இந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் Roc No. DA1/9968/2019 dtd. 20/4/2020 விசாரணைக்கு உத்தரவிட்டது.
தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் ,அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன், திருப்பதி தேவஸ்தானத்தில் நிலுவையில் இருக்கும் 1989 ஆம் ஆண்டின் GO 1060 வின் படி திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்வோர்கள “கல்வி கற்பிக்கும் நிறுவனங்களைத் தவிர, எந்தவொரு வகையிலும் இந்து மதத்தை வெளிப்படுத்தும் நபர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படும்.அதன்பிறகு, 2007 ஆம் ஆண்டில் GO 1372 இல் விதி திருத்தப்பட்டது, TTD ஆல் நிர்வகிக்கப்படும் அல்லது நிதியளிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் எந்தவொரு வகையிலும் எந்தவொரு பதவிகளுக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நியம்மிக்கப் படுவர்” என்ற சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.