இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவிட்- 19 நோய்க்கான தடுப்பூசி, கோவாக்ஸின் (COVAXIN) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் கோவிட்- 19 நோயின் காரணியான SARS- CoV – 2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்படுத்தப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் (COVAXIN) என்னும் தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ளது .
உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசியும் மருந்துகளை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகின்றன, இது தற்போது உலக நாடுகளிடையே பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடுத்த தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து உலக அளவில் மிக பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பபடுகிறது.இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பை குணப்படுத்தவும் இறப்புகளை குறைக்கவும் டெக்சாமெத்தசோன் (Dexamethasone ) என்ற மருந்து பெரிய அளவில் பலன் அளிக்கிறது என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பரிந்துரைந்துள்ளது.
மேலும் கடந்த திங்கன்று சீன ராணுவம் அவர்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தின் ஆராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது , இவ்வாறு உலகம் முழுக்க இருக்கும் 100 மேற்ப்பட்ட முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன.இந்த நிலையில், இந்தியாவில் ஹைதராபாத்தில் , ஜீனோம் வாலி பகுதியில் இருக்கும் BSL-3 (Bio-Safety Level 3) சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசியான, `கோவாக்ஸின் (COVAXIN)’ கண்டுப்பிடிக்கும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம், இது எபோலா வைரஸ், போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஸிவைரஸ்(Zika) ஆகியவற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் 1.2 கோடி மக்களுக்கு மேல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை எதிர்க்க மருந்தும் தடுப்பூசியும் தான் தற்போது காலத்தின் தேவையாக உள்ளது.இதன் முதற்கட்ட சோதனையாக விலங்களுக்கு செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததை அடுத்து , மனிதர்களிடம் வரும் ஜூலை மாதம் முதல் மருந்தைச் செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கியுள்ளது.உலக அளவில் பல நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில்,இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி மருந்தினை, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கு அனுமதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவே கருதப்படுகிறது.