இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது நீண்ட காலமாக நடந்து வரும் தொடர் கதையாகிவருகிறது.கடந்த மே மாதம் முதல் இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் திசோ ஏரியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது, கடந்த ஜீன் மாதம் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் காண பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதை அடுத்து இந்தியாவில், சீனா தனது செயலிகள் மூலம் உளவுபார்ப்பதாகச் சொல்லி, 59 சீனப் பின்னணிகொண்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று முன்னறிவிப்பு எதுவும் இன்றி பிரதமர் மோடி தரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே, நிமு பகுதிக்கு தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், தரைப்படைத் தளபதி எம்எம் நரவானே ஆகியோருடன் இன்று காலை லடாக் சென்றார் , அங்கு சீனாவுடன் மோதல் நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பிரதமர் நேரடியாக ஆய்வு செய்தார்.
மேலும் லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் பற்றியும் அவர்களது நலன்களையும கேட்டறிந்தார் பிரதமர் மோடி இதன் பிறகு மதியம் 2 மணியளவில் ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார் பிரதமர் மோடி,
அதில் , நான் மட்டும் கிடையாது, இந்த ஒட்டுமொத்த நாடும் ராணுவவீரர்களான உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது .உங்களது மனவலிமையும், வீரமும் இங்கு உங்களை சுற்றியுள்ள மலைக் குன்றுகளை விட உயரமாகவும் இருக்கிறது என்றும் உங்களது அர்ப்பணிப்பு உணர்வு உலகத்தில் வேறு எந்த நாட்டு வீரர்க்கும் கிடையாது நீங்கள் காட்டி வரும் இந்த வீரம் உலக நாடுகள் அனைத்தாலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது என்றார் மேலும் கல்வான் பள்ளத்தாக்கில வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்தார்,மேலும் இந்த நாடு உங்களது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது, ராணுவ வீரரின் வீரத்தை கண்டு இந்தியத்தாய் பெருமிதம் கொண்டிருக்கிறாள். நீங்கள் பாரத மாதாவின் கவசங்கள். இந்தியா எந்த ஒரு சவாலையும் முறியடித்து வெற்றி பெறும் வலிமை கொண்ட நாடாக இருப்பதில் உங்களது பங்கு மிக முக்கியமானது என்று எழுச்சிஊட்டும் விதமாக உற்சமாக உரையாற்றினார் பிரதமர் மோடி.
மேலும் கிருஷ்ண பரமாத்மா மற்றும் திருக்குறளை எடுத்துகாட்டி பேசிய பிரதமர் மோடி ,இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அதேநேரம் நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியதே கிடையாது. கிருஷ்ண பரமாத்மா புல்லாங்குழல் வாசித்த அதே கைகளில்தான் சுதர்சன சக்கரத்தை வைத்திருந்தார். இதையடுத்து திருக்குறளில் படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு திருக்குறளை அவர் உச்சரித்தார், “வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்” என்று கூறி பிரதமர் இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார்.
இறுதியாக வீரமுள்ளவர்கள்தான் அமைதியை விரும்புவார்கள், நாடு பிடிப்பது, எல்லைகளை விரிவாக்குவது எல்லாம் பழைய கால பழக்கவழக்கம் . இப்போது நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் அடைய வேண்டியதற்கான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்று 26 நிமிடங்கள் பிரதமர் மோடி உரையாற்றினார்,பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தோடு மோடி தனது உரையை நிறைவு செய்தார். வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதை போல இருந்தது இந்த உரையாடலில் சீனாவின் பெயரை பிரதமர் குறிப்பிடவில்லை என்றபோதிலும், மறைமுகமாக சொல்ல வேண்டிய செய்தியை அவர் சொல்லிவிட்டார் என்று பலரும் பாரட்டி வருகின்றனர.இத்தனை மோதல் நிலவக் கூடிய ஒரு பகுதிக்கு பிரதமரே நேரடியாக முன்னறிவிப்பு எதுவும் இன்றி சென்று இருப்பது சீனாவை மட்டுமின்றி உலக நாடுகள் அத்தனையையும் உன்னிப்பாக கவனிக்கச் செய்துள்ளது.