கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் குறைந்து நெருக்கடிநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கே வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளன. வெளிநாட்டினரை அவர்களின் நாட்டிற்கு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் தெனஇந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், குவைத் அரசாங்கம் தங்கள் தேசத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டினர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம், குவைத்தில் வசிக்கும் எட்டு லட்சம் இந்தியர்களின் தலைவிதி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. அவர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதைப்பற்றி உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, குவைத்தின் நாடாளுமன்றத்தின் சட்ட மன்றம் குழுவினர், இந்த வரைவு ஒதுக்கீட்டு மசோதாவை அரசியலமைப்பாக மாற்ற தீர்மானித்துள்ளது. இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற குழு விரிவான திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும் . இந்த மசோதாவின் படி குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தை இந்தியர்கள் தாண்டக்கூடாது என்று முடிவு செய்து உள்ளதாகவும் மேலும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா சமீபத்தில் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குவைத்தில் மொத்தம் 43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், அதில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வெளிநாட்டினர். குவைத்தில் சுமார் 14.5 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். வெளிநாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் எட்டு லட்சம் இந்தியர்கள் இப்போது குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.