பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரை சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிள்ளார். எத்தனை பதவிகளை அவர் வகித்து மக்களிடம் நற்பெயரை ஈட்டியிருந்தாலும், அமுதா ஐஏஎஸ் என்றதும், சமீப காலங்களாக நினைவுக்கு வருவது, அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்ததுதான்
பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரை சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிள்ளார். எத்தனை பதவிகளை அவர் வகித்து மக்களிடம் நற்பெயரை ஈட்டியிருந்தாலும், அமுதா ஐஏஎஸ் என்றதும், சமீப காலங்களாக நினைவுக்கு வருவது, அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்ததுதான்
தமிழகத்தை சேர்ந்த அமுதா, தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த அமுதா, தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி வழங்கி கவுரவித்துள்ளது.