சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30 சதவீதம் அளவுக்குகுறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மாணவர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்
கொரோனாவைரஸ்பரவல்தடுப்புநடவடிக்கையாக, நாடுமுழுவதும்பள்ளி, கல்லூரிகள்உள்ளிட்டகல்விநிறுவனங்கள், கடந்தமார்ச் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஐந்துகட்டங்களாக பொதுமுடக்கம்அமல்படுத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, ஜூன் 1 தேதி முதல் பொதுமுடக்கத்தில் பலவேறு தளர்வுகளை மத்திய அரசுஅறிவித்துவருகிறது. இந்தத்தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்தநிலையில் ,நடப்புகல்வியாண்டில் (2020 -21) 9- 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க இருப்பதாக மத்தியஅரசு அறிவிப்புகளை வெளியிட்டுஇருந்தது. இதுதொடர்பாக கல்வியாளர்கள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. அமைச்சகத்தின் வேண்டுகோள் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2020-21-ம்கல்வியாண்டுக்கான 9-ம்வகுப்புமுதல் 12-ம் வகுப்புவரையிலானசிலபாடங்கள்நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ இயக்குநர்வெளியிட்டுள்ளார். 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருந்தகூட்டாட்சி, குடியுரிமை,தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம்,இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.இதேபோல 12-ம் வகுப்பு பாடதிட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறுதல்நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர்பணமதிப்பிழப்பு ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பல கல்வியாளர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துக் வருகின்றனர்.