உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை ‘இந்தியா குளோபல் வீக் 2020’: என்ற பெயரில் வீடியோ கான்பிரஸ் வாயிலாக மூன்று நாள் நடைப்பெறும் மிகப்பெரிய சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது, இதை யுகே வை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மீடியா நிறுவனமான இந்தியா ஐஎன்சி (India Inc) நடத்துகிறது, வருடாந்திர நிகழ்வான இதில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள், 250க்கும் மேற்பட்ட வணிகர்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்துகொண்டனர்,இந்தியா குளோபல் வீக் 2020′: என்ற மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், “எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இருந்து இந்தியா மீண்டு வரும் என்பதே வரலாறு. மக்களின் சுகாதார நலனை போல பொருளாதார நிலையிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.
கடந்த 6 வருடங்களில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இந்தியர்கள் எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன எனவும் மேலும் கொரோனா நோய்க்கு எதிராக இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும் என்றார்
இதை அடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது மத்திய அரசின் திட்டங்களின் ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்துள்ளது என்றார்,இறுதியாக இந்தியாவில் முதலீடுகள் செய்ய அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். உலகிலேயே இந்தியாதான் முதலீடு செய்ய எளிமையான நாடாக இருக்கிறது என்றும் இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான தாயகம்.உலகில் இந்தியாவை போல வேறு எந்நாடும் கிடையாது , என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் லட்வா கூறிகையில், பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு அதிக மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது .மேலும் உலக அளவில் பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் குரலை உலகம் கேட்க இது சரியான தருணம், இதனால் இந்த நிகழ்வு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.