கடந்த மே. 12. 2020 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம், கட்டமைப்பு, அமைப்புகள், மக்கள்தொகை, தேவை ஆகிய ஐந்து தூண்களில் அடிப்படையில் சுயசார்பு இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று விடுத்த அறைகூவலையடுத்து சுயசார்பு இந்தியாவுக்கான சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தையும் அறிவித்தார்.
இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ விவகாரங்கள் துறை,101 பொருள்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்து, இந்தப் பட்டியலில் உள்ள பொருள்களைக் குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின்னர் இறக்குமதி செய்யக் கூடாது என்று தடை விதித்து – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1950களுக்கு பின் உள் நாட்டின் ராணுவத்தின் தேவைக்கு இறக்குமதி செய்த நாடுகளில் தற்போது இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.
மதிப்பு 2017ல் வரை சுமார் 119.89 Billion TIV என்று Stockholm International Peace Research Institute (SIPRI) ஆய்வுகள் கூறுகிறது.
இரண்டாவது முன்றாவது இடத்தில் ஜெர்மனி , சீனா இருந்து வருகிறது. என்றாலும் இந்தியா இறக்குமதி மிக மிக அதிகம்.
அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் அவர்கள் அமைச்சர் அவையின் முடிவின் படி உள் நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும். அன்னிய முதலீடுகள் அனுமதித்து , உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளது
இந்தப் பட்டியலில் உள்ள பொருள்களைத் தயாரிப்பதற்காக ஒரு மிகப்பெரும் வாய்ப்பு, இந்தியப் பாதுகாப்புத் தொழில்துறைக்குக் கிடைத்துள்ளது. தங்களது சொந்த வடிவமைப்புகள், உற்பத்தித்திறன், புதிய தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துதல், பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், ஆகியவை மூலமாக இராணுவப் படைகளின் இனிவரும் ஆண்டுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தொழில்துறை மேற்கொள்ளும்.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு, பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள்,இராணுவத் தளவாடங்கள் வாரியம், தனியார் தொழில்துறை உட்பட பல பங்குதாரர்களுடன் இராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், பல்வேறு கருவிகள், அமைப்புகள் ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க இந்தியத் தொழில்துறையின் தற்போதைய திறன்கள், வருங்காலத் திறன்கள் ஆகியவை பற்றி மதிப்பிடுவதற்காக பல சுற்று ஆலோசனைகள் நடத்திய பிறகு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அந்த பட்டியலின் படி 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை செய்ய முடிவு எடுத்துள்ளது.
மற்றொரு நடவடிக்கையாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2020-21ஆம் ஆண்டுக்கான மூலதனப் பொருள்களை வாங்குவதற்கான பட்ஜெட்டை, உள்நாட்டு மூலதனப் பொருள்கள், வெளிநாட்டு மூலதன பொருள்கள் வாங்குவதற்கான பட்ஜெட் என்று இரண்டாகப் பிரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மூலதனப் பொருள்கள் வாங்குவதற்காக ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தனி பட்ஜெட் தலைப்பு துவக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடைவதற்கான மிகப்பெரிய அடியெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.