Tamilnadu

காவிரியில் கர்நாடகா கட்டியுள்ள அணைகளே மிக அதிகம் ? | தமிழக அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களின் பேச்சு |

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதியில் அணைகளை கட்ட முடியாமல் போவதற்கு என்ன காரணம்.

போதுவாக அணைகளை கட்ட மேட்டுப்பாங்கான நிலப்பகுதி வேண்டும் அப்படி இருந்தால் தான் தண்ணீரை சேகரித்து வைக்க முடியும்.

மேலும் தமிழகத்தில் மேட்டூரை தாண்டிய பிறகு சமதளமான நிலப்பரப்புதான் உள்ளது. அதில் நிறைய தடுப்பணைகள் ஏற்கனவே தமிழகத்தில் கட்டப்பட்டு உள்ளது. சில தடுப்பணைகள் தற்போது கட்டப்பட்டும் வருகிறது.

‘காவிரியில் கர்நாடகா அரசு கட்டியுள்ள அணைகளே மிக அதிகம். தமிழ்நாட்டில் ஏது அணை? என்று கேள்வி பலர் மனதில் எழுகிறது.

அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் இப்படி பேசுவதை கேட்டிருக்க முடியும். இதனால் பலரும் அவர்கள் பேசுவதில் நியாயம் இருப்பதுபேல் தோன்றுவது இயல்பு தான்.

ஆனால் உண்மையில் கர்நாடகாவைவிட தமிழகத்தில்தான் அதிக காவிரி அணைகள் இருக்கின்றன. மேலும் காவிரியை பொருத்தவரை கர்நாடகாவைவிட தமிழகத்தின் நீர் சேமிப்பு அளவும் அதிகம்.

அதன் புள்ளி விவரங்கள் இதை படிக்கும் வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

மேலும் கீழே கொடுக்கபட்டும் தரவுகள் அனைத்தும் தமிழக மற்றும் கர்நாடக அரசின் அரசு குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் கர்நாடகா கட்டியுள்ள அணைகளின் விவரங்கள் மற்றும் கொள்ளளவு.

1.கிருஷ்ண ராஜ சாகர் – 49.45 TMC

2.ஹேமாவதி – 37.10 TMC

3.கபினி – 19.52 TMC

4.ஹாரங்கி – 8.5 TMC

மொத்தம் : 114.57 TMC

காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழகம் கட்டியுள்ள அணைகள் மற்றும் கொள்ளளவு.

1. மேட்டூர் – 93.47 TMC

2. பவானி சாகர் – 32.80 TMC

3. அமராவதி – 4.05 TMC

4. மேல் பவானி – 3.57 TMC

5.போர்த்திமன்ட் – 2.12 TMC

6. பைகாரா – 2 TMC

7. முக்கூர்த்தி – 1.79 TMC

8. மாயனூர் கதவணை – 1.1 TMC

9.மேட்டூர் முதல் திருச்சி முக்கொம்புவரை கட்டப்பட்டுள்ள 8 நீர் மின் நிலையங்களுடன் கூடிய கதவணைகள் – 4.5 TMC

10.முக்கொம்பு மேலணை, கல்லணை, கொள்ளிடம் கீழணை (அணைக்கரை) – 2.1 TMC


மொத்தம் : 147.5 TMC

மேலும் இதை தவிர தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பனைகள் மற்றும் கதவணைகளின் புள்ளி விவரங்கள்.

Kaveri River Map Start to End

நாகை மாவட்டம் குமார மங்களத்தில் 396 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவாரும் கதவணை 60% கட்டுமானத்தை கடந்திருக்கிறது.

மேலும் அதன் நீர் தேக்குத் திறன் 0.75 TMC. நாகை போன்ற தாழ் நிலப்பகுதிகளில் சிறு தடுப்பணைகளை கட்டுவதுக்கூட பொறியாளர்களுக்கு சவாலானது.

காட்டுமன்னார்கோயில் அருகே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டுவரும் கதவணையின் நீர் தேக்குத் திறன் 1.7 TMC.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தற்போது 13 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றது. அதில் 4 பெரிய அளவிலான கதவணைகள்.

கார்நடகத்தை விட தமிழகத்தில் நீர் தேக்கங்கள் ஆதிகம் என்பதை மேலே உள்ள புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகிறது காட்டுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

four × 1 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us