Health

மத்திய சுகாதாரத்துறை அறிமுகப்படுத்திய இ-சஞ்சீவனி தொலை மருத்துவத் திட்டத்தை சிறந்த முறையில் பிரபலப்படுத்திய தமிழகத்திற்கு டாக்டர். ஹர்ஷ்வர்தன் பாராட்டு.

மத்திய சுகாதாரத் துறையின் தொலை மருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி புறநோயாளிகள் நோய்கண்டறியும் பிரிவுமூலம், தொலை மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்ததையடுத்து, மாநிலங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப் படும்விதம் குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடை பெற்றது.   மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே பங்கேற்ற இக் கூட்டத்தில்,  தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் காணொளிக் காட்சி மூலம் கலந்து கொண்டார்.  

2019 நவம்பரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகாலத்திற்குள், இ-சஞ்சீவனி மற்றும் வீடியோ கலந்தாலோசனை மூலம் நோய்கண்டறியும் இ-சஞ்சீவனி புறநோயாளிகள்சேவை, இதுவரை 23 மாநிலங்களில் (நாட்டின்மொத்தமக்கள் தொகையில் 75 சதவீத மக்களைக் கொண்ட மாநிலங்கள்) இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன்,  எஞ்சிய மாநிலங்களில் இதனை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஒரு வரலாற்று சாதனையாக, தேசிய தொலை மருத்துவச்சேவை, 1,50,000 தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, நோயாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே, நேரடியாக மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றதுடன், ஒரு மருத்துவர் மற்றொரு மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும் வழிவகை செய்துள்ளது. 

இந்த சாதனைக்காக பாராட்டு தெரிவித்த டாக்டர்.ஹர்ஷ்வர்தன், “பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக, ஆயுஷ்மான்பாரத் – சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் அகன்றகற்றை மற்றும் செல்போன்கள் வாயிலாக இத்திட்டம் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது.  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஒத்துழைப்புடனும், தன்னலமற்ற, திறமைமிக்க மருத்துவர்கள் மற்றும் நிபுனர்கள் குழுவின் சிறப்பான சேவையாலும், இ-சஞ்சீவனி திட்டம் போன்ற தொலை மருத்துவ முறைகள் வாயிலாக நம்மால் சுகாதாரச் சேவைகளை வழங்க முடிகிறது.  இது, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்த உதவியுள்ளது” என்றும் தெரிவித்தார்.  

தற்போதைய கோவிட்-19  பெருந்தொற்று காரணமாக, மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கிய இரண்டாவது தொலை மருத்துவ ஆலோசனை சேவையான,  இ-சஞ்சீவனி ஓ.பி.டி. எனப்படும்,  நோயாளிகள் மருத்துவரிடம் நேரிடையாக ஆலோசனை பெறக்கூடிய கட்டணமில்லா மின்னணு மருத்துவ ச்சேவை, 20 மாநிலங்களில் உள்ள மக்களிடம் வேகமாக பிரபலமடைந்ததுடன், மருத்துவமனைகளுக்கு மக்கள் நேரில் செல்லாமல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.  இ-சஞ்சீவனி ஓ.பி.டி. பிரிவில், நாடு முழுவதும் 2,800 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இத்திட்டத்தில் பணியாற்றி வருவதோடு, ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் போதிலும், தினந்தோறும் சுமார் 250 மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மின்னணு மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனர்.  

தற்போது, நாடுமுழுவதும் மொத்தம் 1,58,000 தொலை மருத்துவஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  இதில் 67,000 ஆலோசனைகள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் உள்ள இ-சஞ்சீவனி பிரிவு மூலம் வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன், நோயாளிகள் மருத்துவரிடமே ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்சீவனி ஓ.பி.டி.முறையிலும் 91,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு முறைகளிலும் (இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி) தோராயமாக,  தினந்தோறும் சுமார் 5,000 ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. 

இ-சஞ்சீவனிமற்றும்இ-சஞ்சீவனி ஓ.பி.டி.ஆகிய இரண்டு முறைகளிலும்,  நாட்டிலேயேமிக அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலமாக தமிழகம்திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 32 ஆயிரத்து 35 தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதற்குஅடுத்தபடியாக, ஆந்திரபிரதேசம் (28,960), ஹிமாச்சலப்பிரதேசம் (24,527), உத்தரப்பிரதேசம் (20,030), கேரளா (15,988), குஜராத் (7,127), பஞ்சாப் (4,450), ராஜஸ்தான் (3,458), மகாராஷ்டிரா (3,284),  மற்றும்உத்தராகண்ட் (2,596) எனமொத்தம் 10 மாநிலங்கள்தொலைமருத்துவஆலோசனைகளைஅதிகளவில்வழங்கியமாநிலங்களாகத்திகழ்கின்றன. 

மேலும், நோயாளிகள் மருத்துவர்களிடம் நேரிடையாக ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்சீவனி ஓ.பி.டிமுறையில் 32,035 ஆலோசனைகளை வழங்கி, இந்தமுறையில் அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.  

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவர்களுக்கிடையே ஆலோசனை நடத்தும் இ-சஞ்சீவனி முறையில் ஆந்திரப்பிரதேசமும் (25,478),  ஹிமாச்சலபிரதேசமும் (23,857)  அதிக ஆலோசனைகளை வழங்கியுள்ளன.  

தொலைமருத்துவமுறையில்,  இ-சஞ்சீவனி ஓ.பி.டிசேவைகளை அதிகளவில்வழங்கிசாதனை படைக்க ஒத்துழைப்பு வழங்கியமைக்காக, மத்தியசுகாதாரத்துறை மற்றும் மேம்பட்டகணிப்பு மேம்பாட்டு மையத்திற்கும்,   தமிழகமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.                                                             

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

6 − 3 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us