ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்டோபர் 5ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.