குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும்
மூன்று வருடங்களைத் தான் பூர்த்தி செய்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. வெங்கைய நாயுடு, மாற்றத்துக்கான அறிகுறிகளை மாநிலங்களவையின் செயல்பாடுகள் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், அதிக அளவிலான செயல்திறன், கடந்த சில அமர்வுகளில் அதிகரித்த சட்டப்பூர்வ வெளிப்பாடுகள் மற்றும் முதல் முறையாக மாநிலங்களவைக் குழுக்களின் கூட்டங்களில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தைக் கடந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால அச்சங்கள் மற்றும் தயக்கங்களுக்கு மாறாக, கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தன்னை முன்னெப்போதையும் விட இன்னும் சுறுசுறுப்புடனும், செயல்பாடுகளுடனும் வைத்திருந்ததாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. வெங்கைய நாயுடு கூறினார்.
மேலும் மாற்றத்துக்குத் தகுந்தவாறு புதிய யதார்த்தங்களுக்கு தன்னுடைய மனதை விரைவில் பழக்கப்படுத்தியதே இதற்கு காரணம் என்று பேசினார்.
ஆகஸ்ட் 11, 2017 அன்று தான் பதவியேற்றது முதல், கடந்த மூன்று வருடங்களாக மாநிலங்களவையின் செயல்பாட்டைப் பற்றி பேசிய அவர் மாற்றத்துக்கான அறிகுறிகள் என்று தான் குறிப்பட்டதற்கான ஆதாரத்தை அளித்தார்.
தான் பொறுப்பேற்றக் கொண்ட பிறகு ஒரு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வைத் தொடங்க உத்தரவிட்டதாகவும், கடந்த 25 வருடங்களாக அவையின் செயல்திறன் குறைந்து கொண்டே வந்தது அதில் தெரிய வந்ததாகவும் கூறினார்.
கடந்த 20 வருடங்களில் 1999-இல் ஒரே ஒரு முறை தான் 100 சதவீத உறுப்பினர் வருகையை அவை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவையின் மூன்று கூட்டத் தொடர்களின் செயல்பாடுகளை தேர்தல் ஆண்டு கடுமையாக பாதித்த போதிலும், கடந்த மூன்று வருடங்களில் தான் தலைமை வகித்த எட்டுக் கூட்டத் தொடர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் 65.50 சதவீதமாக இருந்ததாக அவர் கூறினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்,
‘இணைப்பது, தொடர்பு கொள்வது, மாற்றத்தை ஏற்படுத்துவது’
என்னும் தலைப்பிலான புத்தகத்தை, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புத்தகத்தின் மின் பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
கடந்த ஒரு வருடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைக் கொண்ட 334 படங்களுடன் கூடிய இந்த 251 பக்கப் புத்தகத்தை வெளியீடுள்ளது.