இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று உதயமாகி இருக்கிறது .இது தொடர்பாக பாரதிராஜா கூறிகையில் தற்போது உள்ள தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ எனது எண்ணம் இல்லை என்றும் தற்போது கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ள சினிமாவை, திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்கவே இந்த தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறது என்றும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய சங்கத்தின் பிறப்பு அவசியத்தை பற்றி தயாரிப்பாளர்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.