பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் திரு மஹிந்த ராஜபக்ஷ தெலைபேசியில் தெடர்புக்கொண்டு இலங்கையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் COVID-19 தொற்றுநோய்க்கு இடையூறுகள் இருந்தபோதிலும் தேர்தல்களை திறம்பட நடத்திய பிரதமர் மற்றும் அரசாங்கத்தையும் இலங்கையின் தேர்தல் ஆனையத்தையும் பாராட்டினார்.
இலங்கை மக்கள் தேர்தல்களில் உற்சாகமாக பங்கேற்றதற்காக அவர் பாராட்டினார், மேலும் இது இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட வலுவான ஜனநாயகத்தை இது பிரதிபலிக்கிறது என்று பாராட்டி வாழ்த்தினார்.
பிரதமர் திரு. மோடி, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் (எஸ்.எல்.பி.பி) கட்சியின் வியக்கதகு தேர்தல் செயல்திறனைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார், மேலும் அவரது வாழ்த்துக்களையும் திரு மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
தங்களது நல்ல மற்றும் பயனுள்ள முந்தைய தொடர்புகளை நினைவுகளை கூறித்து இரு தலைவர்களும் பழைய மற்றும் புதிய பரிமான இந்தியா – இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் ஆரம்பகால முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இடத்தில் வலியுறுத்தினர்.
COVID 19 தொற்றுநோயால் இரு நாடுகளும் சவால்களை எதிர்கொள்வதால் தலைவர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
மேலும் இருதரப்பு உறவுகளை வரும் நாட்களில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரு தலைவர்களும் தீர்மானித்தனர்.
பிரதமர் மோடி இலங்கை பிரதமருக்கு பாராட்டு
By
Posted on