முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருச்சி – சேலம் புறவழிச் சாலையில் உமையாள்புரம் என்ற இடத்தில் நள்ளிரவில் காரும் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த ஏழு பேரில் 3 பேர் சம்பவ இடத்திலயே பலியானார்கள்.
காயமடைந்த 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசிறி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்