நூறு சதவிகித அவசர கடன் உறுதித் திட்டத்தின் கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18-ம் தேதி வரை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன.
இவற்றில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டன. தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், மத்திய அரசு அவசர கடன் உறுதித் திட்டத்தை அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை வங்கிகள், ரூ.76,044.44 கோடி கடனுதவியை அளித்துள்ளன. இதில் ரூ.56,483.41 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. தனியார் துறை வங்கிகள் அளித்துள்ள ரூ.74,715.02 கோடி கடனுதவியில், ரூ.45,762.36 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு விட்டது.