காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் அமைந்துள்ளது வைரமேக தடாகம் என்று அழைக்கப்படும் உத்தரமேரூர் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழ அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு பல வரலாற்று குறிப்புகள் உள்ளன.
இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 543 ஹெக்டேர் மற்றும் 8 கிமீ நீளமும் உள்ள கரைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஏரி சுமார் 18 கிராமங்களில் உள்ள 6000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதியளிக்கிறது. 20 அடியாக இருந்த இந்த ஏரியின் ஆழம் தற்போது சுமார் 10 அடி மட்டுமே உள்ளது.
இந்த பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அப்பகுதி ஏரி நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர், மேலும் உத்தரமேரூர் பேரூராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி இருக்கிறது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக பருவமழை கிடைத்தும் கால்வாய்களின் அடைப்பின் காரணமாக (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிறைந்தாலும்) உத்திரமேரூர் ஏரி நிறம்புவது இல்லை இதனால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆங்கிலேயர்கள் காலத்தில் 1890ம் ஆண்டு இந்த உத்தரமேரூர் ஏரி தூர் வாரப்பட்டது. அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு இந்த ஏரி தூர்வாரும் பணி மற்றும் கரை பலபடுத்தும் பணி துவங்கி உடனே கைவிடப்பட்டு எந்த பணியும் நடைபெறவில்லை.
மேலும் இந்த ஏரியின் நீர் வரத்து ஆதாரம் செய்யாற்றை நம்பி உள்ளது. செய்யற்றிலிருந்து வரும் கால்வாய் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் பொதுப்பணித்துறை முலம் செப்பணிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ஆம் ஆண்டு பெய்த மழையில் இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாசன கால்வாய்கள் செப்பணிடபபடாமல் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருந்ததால், நீர் முழவதும் பாசன கால்வாய்களில் செல்லாமல் அனைத்தும் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கலில் பாய்ந்து பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி விவாசாயிகளின் நீண்ட கால கோரிக்கை, ஏரியில் இருந்து வெளியேறும் நீரை விவசாய நிலங்களுக்கு பயன்படும் வைகையில் ஆற்றுப்பகுதியில் இருந்து வரும் கால்வாய், ஏரி மற்றும் ஏரியின் பாசன கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி கடைமடை பகுதிகளுக்கு நீர் வரத்தை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணிதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்பது குற்றச்சாட்டு
மேலும் விவாசாயிகளின் நீண்டகால கோரிக்கையைை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலமையின் கீழ் இருக்கும் பொதுப்பணித்துறை அப்பகுதியில் அமைந்துள்ளது உத்தரமேரூர் ஏரியை உடனடியாக தூர்வாரி சீர் (குடிபராமத்து பணி) செய்ய உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் அப்பகுதி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.