அவர்களின் ஆடிட்டர்களில் பெரும்பான்மையானவர் பிராமணர்கள் என்பதையும், அவர்களின் வழக்கறிங்கர்களில் பெரும்பான்மையானவர் பிராமணர்கள் என்பதையும், அவர்களின் தனியார் புரோகிதர்களின் பெரும்பான்மையானவர் பிராமணர்கள் என்பதையும், மக்கள் கண்களில் படாமல் செய்வதில் கை தேர்ந்தவர்கள் திமுகவினருக்கு, அவர்கள் தலைவர்களும் என்பதை இங்கு நாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
திமுகவின் கொள்கைகளே நகைப்புக்குரியவை – எதற்கு எடுத்தாலும் அவர்களின் மெனு கார்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி கோஷம் போடுவதில் இவர்கள் வல்லவர்கள். அவர்கள் மெனு கார்டில் உள்ள கொள்கைகள் இவையே: பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழனை காப்பாற்று, காவேரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை, விவசாயிகள் நலன் – என்று மாற்றி மாற்றி அறுக்கப்படும் பொய் மாவு தான்.
இந்த கேலிக்குரிய கொள்கை விளக்கப் பத்திரத்தில் பிராமண எதிர்ப்பு என்பது இந்து எதிர்ப்புக்கு அடி போடுவதென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இந்து வெறுப்பானது இன்று முகமூடி கிழிக்கப்பட்டு பல்லிளித்துக் கொண்டு இருக்கிறது. திமுகவின் வேடம் களைந்து சிரிப்பாய் சிரிக்கும் அளவிற்கு மக்களிடையே விவேகமும், ஞானமும், தெளிவும் பிறந்து விட்டது என்றே கூற வேண்டும்.
நம் கண் முன்னால் கிராமம்தோறும் மிஷநரிகள் நடத்தும் மத மாற்ற அட்டூழியங்கள், அவர்கள் நம் இந்து கடவுள்களைத் தூற்றும்படி உபயோகிக்கும் அவச்சொற்கள், மத நல்லிணக்கமோ மத சகிப்புத்தன்மையோ கொண்டிராத இஸ்லாமிய சமூகத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் பொதுக் கொலைகள், மனித நேயமற்ற கொள்கைகள் கொண்ட ஆபிரகாமியரின் மதப்புத்தகங்கள், இவற்றை எல்லாம் ஓட்டுக்காக ஆதரிக்கும் திமுகவினரின் மதவெறியுற்ற கொள்கைகள் – இவை அனைத்தும் சேர்ந்து திமுகவின் முடிவை மிக அருகில் கொண்டு வந்து விட்டன என்றே கூறலாம்.
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு மகா கேவலமான ஒரு செயலாகவும், இந்த இந்து மத வெறுப்பின் முக்கிய வெளிப்பாடாகவும் இருந்தது கறுப்பர் கூட்டத்திற்கு திமுகவினர் அளித்த ஆதரவு தான். கறுப்பர் கூட்டத்தின் ஆதரவாளர்கள் எல்லாருமே தமிழகத்தை சாக்கடையாகவே மாற்றத் துடிக்கும் தமிழக அரசியலில் உள்ள பிணக்குழுக் கூட்டம் தான் – இதில் திருமுருகன் என்ற டேனியல் காந்தி, விடுதலை சிறுத்தைகளின் தோல் திருமாவளவன், இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் அரசியல் அடைக்கலம் கொடுத்தவராயும் விளங்கும் திமுகவினரும் அங்கம். கறுப்பர் கூட்டம் எனும் அரசியல் நச்சுக் கூட்டத்தினர் தமிழகத்தில் இந்துக்களின் புனிதமான மத நம்பிக்கையை காலடியில் போட்டு மிதிக்கும் வண்ணம் கந்தர் சஷ்டி கவசத்தைக் கொச்சைப் படுத்திப் பேசினார். தமிழக கடவுளாகிய முருகனை அவமதித்துப் பேசியது தமிழக இந்துக்களைக் கொந்தளித்து எழச் செய்தது. பொறுத்தது போதும் இனி இவ்வகை அவமானங்களை சகித்துக் கொள்ளக் கூடாது என்பது போல மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
மக்கள் மத்தியில் இவ்வாறு நிலைமை இருக்க, மக்கள் மனதில் இவ்வளவு கொந்தளிப்பு இருக்க, மக்கள் அறிந்து கொண்டவற்றில் இவ்வளவு தெளிவு இருக்க, திமுகவினரோ இன்னும் பழைய பஞ்சாங்கம் போல் பழைய பல்லவியையே பயாடிக் கொண்டிருப்பது தான் வேடிக்கை. பத்து வருடம் பதவியை விட்டு விலகி இருப்பது அவர்களை ஒரு வித மன நோயை நோக்கித் தள்ளி விட்டது போல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
மக்களுக்கு இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் – திமுகவினர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள்; அவர்கள் நம் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்கள்; அவர்கள் நமக்கு விரோதிகள்; நம்மை ஆள்வது போல் நம்மை அடிமைகள் ஆக்குவதற்குத் துணை செல்பவர்கள்; நம்மைக் கிள்ளுக்கீரையாய் கருதுபவர்கள்; அவர்களை பதவியில் அமர்த்தினால் நம் வாழ்வு, வளம், வழி, வம்சம் எல்லாவற்றையும் இல்லை எனச் செய்து விடுவார்கள்; அவர்கள் ஓட்டை விழுந்த கப்பலில் பயணிப்பவர்கள்; அவர்கள் இன்றோ நாளையோ முழுவதும் மூழ்கி விடுவார்கள்; அவர்களை நம்பக கூடாது; அவர்களிடம் வீரியமும் இல்லை, விவேகமும் இல்லை, நம்மை வாழ வைக்க வழி வகையும் இல்லை.
இதை மறுபடியும் மறுபடியும் எடுத்துச் சொல்லி, இந்த பேய்க் கூட்டத்தைப் பதவிக்கும் வராமல் செய்ய வேண்டும் – 2021-ஆம் வருடத்து தேர்தலில் மட்டும் இல்லை, இனி என்றென்றுமே அப்படியே செய்ய வேண்டும்.
Written by @anexcommie