சர்க்காரியா கமிஷன் குறித்து நான் சிறப்பாக பேச வேண்டியது எதுவும் இல்லை. சர்க்காரியா கமிஷன் ஏற்கெனவே மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதன் மூலம் மு கருணாநிதி என்பவர் அருவருக்கத்தக்க முறையில், அறிவியல் பூர்வமான முறையில், வெறுப்பேற்றும் முறையில் ஊழல் செய்யத் தெரிந்தவர் என்பதை எடுத்துக் காட்டியது. ஆனால் கருணாநிதி என்ற ஊழல் மன்னனையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மேலும் பன்மடங்கு “சிறப்பான” முறையில் செய்து காட்டியவர்கள் ஆ ராஜா மற்றும் கனிமொழி என்கிற கூட்டெலிகள்.
1977-ஆம் வருட சட்டசபை தேர்தலில் திமுக MGR-ஆல் புதிதாக உருவாக்கப்பட்ட அதிமுக-விடம் தோல்வியை தழுவியது. அன்று முதல், 1987-ஆம் வருடம் எம்ஜிஆர் மறைவு வரைக்கும் திமுக பதவியை பிடிக்க முடியாமல் தடுமாறியது. அந்த பரிதாப காலங்களில் நடந்த அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் கருணாநிதி (கிளிசரின் மூலமாக வந்த) கண்ணீரை குடம் குடமாக வடித்தும் பார்த்தார். தமிழர்கள் இளகுவதாக இல்லை. வனவாசம் போதாதா, என்னை பதவியில் ஏற்றுங்கள் என்று ஒப்பாரி வைத்தும் பார்த்தார். தமிழர்கள் இளகுவதாக இல்லை. நீங்கள் நாசமாகப் போவீர்கள் என்று கருத்தும் கொட்டினார். தமிழர்கள் இளகுவதாக இல்லை.
இந்நிலையில் 1987-ஆம் வருடம் எம்ஜிஆர் மறைந்தார். அவர் மனைவியான ஜானகியையும், அவர் அரசியல் வாரிசான ஜெயலலிதாவையும் தலைவர்களாகக் கொண்டு அதிமுக இரண்டு பிளவுகளாக பிரிந்தது. எதிரி இரண்டு பட்டால் ஊழல் பெருச்சாளிகளுக்குக் கொண்டாட்டம் தானே? அதே போல், 1989-ஆம் நடந்த சட்டசபை தேர்தலில், வாக்கு பிரிந்து, திமுக பதவியைக் கைப்பற்றியது. அப்போது சட்டசபையில் நடந்த அமளி துமளி எல்லாம் நாம் நன்கு அறிந்ததே!
ராஜீவ் காந்தியின் உத்தரவின் (அழுத்தம்?) பேரில் 1991-ஆம் வருடம், பதவி ஏற்ற இரண்டே வருடங்களில் திமுக அரசு கலைக்கப்பட்டது. பின்னர், 1991-ஆம் வருட தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு மனித வெடிகுண்டு மூலம் ராஜிவ் காந்தியின் உயிர் பறிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம், ஆதரவு மற்றும் பண உதவி செய்தவர்கள் என்று திமுக மீது தமிழக மக்களுக்கு ஒரு வித வெறுப்பு வந்து 1991-ஆம் வருடத்தில் தேர்தல் தோல்வி தழுவ வேண்டியது ஆயிற்று. ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் 1996-ஆம் வருடம் ஊழல் குற்றச்சாட்டை எடுத்துக் காட்டி ஜெயலலிதாவின் அதிமுக அரசை கவிழ்த்து திமுக பதவியில் ஏறியது.
இத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பலர் தோள் கொடுத்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த மூப்பனார்-சிதம்பரம் ஜோடியின் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பலமான பக்கபலமாக ஒரு தோழமைக் / கூட்டணிக் கட்சி குறித்து கூறியே ஆகா வேண்டும். இவற்றை எல்லாம் விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகச் சிறப்பான பன்ச் டைலாக் ஒன்று – ஜெயலலிதா மற்றும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது – திமுக-தமாகா கூட்டணிக்கு மிக அருமையாக வேலை செய்தது.
அப்போதிருந்தே தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக-திமுக-வின் சூழல் நாற்காலி ஆட்சி தான் நடந்து கொண்டு வருகிறது.
2001-ஆம் வருட சட்ட சபை தேர்தலில், வாக்கு வாங்கி கணக்கை சரியாக போட்ட அதிமுக பதவி நாற்காலியில் ஏறியது. இதைப் பார்த்த திமுகவினர் 2004-ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வைகோவின் மறுமலர்ச்சி திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி செய்து கொண்டு தில்லியில் பதிவில் ஏறும் வகையில் தமிழகத்தில் (புதுச்சேரி உட்பட) நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று வாகை சூடியது.
கையில் 40 எம்பிகளைக் கொண்டு இருந்ததால் அமைச்சரவையில் 7 முக்கிய இடங்களையும் தனது வசம் கைப்பற்றியது. தன் வசம் இருந்த பலமான அமைச்சகங்களைக் கொண்டு பலரையும், பல வகைகளில் ஆட்டம் காட்டியது.
2006-ஆம் வருட சட்டசபை தேர்தலில், அதே கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பதால் ஜெயலலிதாவின் மூலம் எப்போதும் திமுகவின் மைனாரிட்டி அரசு என்ற கிண்டலுக்கும் ஆளாக நேர்ந்தது.
ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 2009-ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தேர்தலில் வெற்றியும் பெற்றது. ஆனால் அப்போதிருந்து 2G ஊழல் இவர்களுக்கு ஒரு சாபமாக அமைந்து, 2011 சட்டசபை தேர்தலில் பதவி இழக்க வேண்டியதாயிற்று.
2014-ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளினால் திமுக கையில் இருந்த அனைத்து இடங்களையும் இழந்து, பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது. தேர்தல் வல்லுநர்கள் இன்று கூட அப்பேர்பட்ட இழப்பு குறித்து ஆராயும் போது, 2G ஊழல் பற்றியே பேசுகின்றனர். காரணம் கேட்டால் அந்த ஊழலில் பேசப்பட்ட பணக்கொல்லையின் அளவு மக்களுக்கு மிகப் பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது என்று கூறுகின்றனர்.
ஊழலில் குற்றச்சாட்டப்பட்ட ராஜாவும், கனிமொழியும் இப்போது வெளியில் இருந்தாலும், மத்திய அரசு வழக்கை மீண்டும் எடுத்துக் கொண்டு உச்ச நீதி மன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதால், இந்த வழக்கு குறித்து இன்னும் பல நாட்கள் சர்ச்சை தொடரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
காங்கிரஸ் திமுக கூட்டணி நரகத்தில் முடிவு செய்யப்பட ஒரு ஜோடி என்று கூறுவது மிகை ஆகாது. காங்கிரசின் ஊழல் வரலாறு அனைவரும் அறிந்ததே … டிராக்டர் முதல் நிலக்கரி வரைக்கும், சுற்றுச்சூழல் முதல் விமானப் போக்குவரத்துத் துறை வரை இவர்கள் அடித்த கொள்ளை சொல்லி மாளாது. இன்றைய தினங்களில் ஊடகங்கள், இணையம், சமூக ஊடகம் போன்றவற்றின் மூலம் மக்கள் இவை குறித்து மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
இப்போது, இவ்வளவு விவரம் தெரிந்த பிறகு, இன்றைய நிலைப்படி, இன்றைய நிலைக்கேற்ப திமுகவும், அதன் கைத்தடி கூட்டணி கட்சிகளும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதன் காரணங்கள் மேலும் சிலவற்றைக் காணலாம்.
எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அதில் தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டு, அதன் மூலம் பணம் பண்ணும் வகையில் ஒரு ஆதாயமான பதவியிலோ, சக்தி வாய்ந்த முறையில் தன் கட்டுக்குள் கொண்டோ இருப்பார்கள்.
தமிழ் மற்றும் பல மொழி ஊடகங்களில் அவர்கள் செலுத்தும் கொடுங்கோல் ஆதிக்கம் நமக்குத் தெரிந்த ஒன்று தான், இல்லையா?
தமிழகத்தில் அவர்கள் அடி பணிந்து அவர்கள் குறி வைத்தோரை தாக்கி உயிருக்கோ, உடலுக்கோ, உரிமைக்கோ சேதம் ஏற்படுத்தக் கூடிய குண்டர் கூட்டம் இருப்பது நாம் அறிந்துள்ளோம், இல்லையா?
தமிழ் கலாச்சாரம் காப்போம் என்று கூறி மனைவி, துணைவி, இணைவு என்று கலாச்சாரச் சீரழிவுக்கு வித்திட்டு, தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரையும், தமிழ் திரைப்பட நடிகைகளையும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதை சர்வ சாதாரணமாய்ச் வெட்கமில்லாமல் செய்யும் நவீன கலாச்சாரச் சிற்பிகளை நாம் அறிவோம், இல்லையா?
மதச்சார்பின்மை என்று கூறி மதத்தைத் தவிர வேறு ஒன்றும் பேசாத, மதத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை ஓட்டும் மைனாரிட்டி மண்ணாங்கட்டிகளின் அடி வருடியாக இருப்பதும் நாம் தெரிந்து கொண்டோம், இல்லையா?
மதச்சார்பின்மை என்றால் மைனாரிட்டி மிஷநரிகள் மற்றும் தலைவெட்டி முல்லாக்களும் சொல்லும் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடுகளை ஆதரவு தருவதே என்று ஒரு புழுவின் வாழ்க்கை வாழ்வது என்று நாம் புரிந்து கொண்டோம், இல்லையா?
இவற்றைக் கண்டால், நமக்கு எல்லாம் இரத்தம் கொதிக்க வேண்டும். இவர்கள் அடிக்கும் கொள்ளைகள் நமக்கு மனங்கலங்கச் செய்தால், இவர்கள் கொண்டுள்ள மைனாரிடி மதவெறி நமக்கு ஒரு உத்வேகம் கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பார்த்த பிறகும் இவர்களை பதவியில் ஏற்றுவது என்பது நமக்கு எல்லாம் ஒரு அவமானம்.
இங்கு ஒரு உதாரணமாக கனிமொழி மற்றும் அவர் தோழர் ஜெகத் காஸ்பர் ராஜ் இடையே உள்ள தொடர்பைப் பார்க்கலாம். காஸ்பர் ஒரு கத்தோலிக்க போதகர் என்று கூறிக் கொள்கிறார். அவர் அப்படிப் பட்ட பதவியில் தான் உள்ளார் என்றோ, அப்பதவியில் இருக்கத் தகுதி உள்ளவர் என்றோ கத்தோலிக்க மதத்தின் மூத்த போதகரான போப்பிடம் இருந்து ஒரு உறுதி மொழி நம்மிடம் கிடையாது.
அப்படிப் பட்ட ஒரு மனிதர் மதபோதகர் என்கிற வேஷத்தில் என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இவர் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், சென்னை சங்கம் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். தமிழ் மையம் மூலம் அன்னியச் செலாவணி மோசடி செய்ப்பவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து இவர் ஒன்றும் இதுவரை கூறவில்லை. கனிமொழியின் தோழமை (?) இருப்பதால் கூறவேண்டும் என்று தோன்ற வில்லையோ என்னவோ?
2009-ஆம் வருடத்தில், இவர் தைரியமாக (திமிராக?) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடுவராகப் பணி புரிந்து வந்தார். காஸ்பர் வரும் முன்னே, கனிமொழி வருவார் பின்னே என்று இவர்களின் உறவு குறித்து பேசப்படுவதுண்டு.
ரம்ஜான் கஞ்சிக்காக நாக்கைத் தொங்கப் போட்டு கொண்டு மசூதிகளுக்கு படை எடுத்த தந்தையின் வழி வந்த கனிமொழி கேக்குக்கு ஆசைப்பட்டோ என்னவோ காஸ்பரின் வழி வந்து மிஷநரிகளின் அடிமையாகவே மாறி விட்டார்.
போலி மதச் சார்பின்மையை போதிக்கும் இந்திய கபட நாடக வேஷதாரிகளுக்கு இது ஒன்றும் புதிதில்லை. இதை பார்த்து அவர்கள் வியப்படையவும் இல்லை.
இங்கு, தமிழகத்தில், இந்த மாதிரி ஒரு பொய்யான நாடகத்தை காலம் காலமாக வாக்கு வங்கி அரசியல் என்ற பெயரில் திமுகவினர் நடத்தி வந்தனர். நடத்தி வருகின்றனர்.
போலி மதச் சார்பின்மை போராளிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வேறுபாடு ஒன்றை நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். இந்துக்களை கண்டு கொள்ளாமல் மதவெறியர்களை ஆதரிப்பது போலி மதச் சார்பின்மை போதகர்களின் வழியாக இருக்கிறது. திமுகவினருக்கோ போலி மதச் சார்பின்மை மட்டும் போதவில்லை – இந்துக்களை இகழ்வது தான் அவர்களின் மிகப் பெரிய குறிக்கோளாக இருக்கிறது.
திமுகவினருக்கு, இது போக, இந்து மத எதிர்ப்பு என்பதை சொல்லி, பிராமண எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்தி, பிராமணர்களை வஞ்சம் தீர்ப்பது போல் பகை பாராட்டுவது ஒரு வாழ்க்கை நடைமுறையாகவே ஆகி விட்டது.
Written by @anexcommie