வேதியியல் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீனோம் எடிடிங் எனப்படும் மரபணு வடிவமைப்புக்கான வழிமுறையை உருவாக்கியதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் தூத்னா ஆகிய இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் 12ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
By
Posted on