உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதேபோல், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பங்கேற்று பேசினார்.
இந்தநிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, செம்பியம் போலீசார், நேற்று, குஷ்பு உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.