போவோமா ஊர்கோலம்’ என உற்சாகம் அளித்தவர், `ஆட்டமா தேரோட்டமா’ என்று நடனமாட வைத்தவர். `என்னுள்ளே என்னுள்ளே என இளக வைத்தவர்,`ராக்கம்மா கையைத்தட்டு’ எனச் சொடக்குப்போடச் செய்தவர், `குயில் பாட்டு… ஓ வந்ததென்ன இளமானே’ என நெகிழவைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்தவர் பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா..
இசைஞானி, ஒரு படத்தின் அத்தனை பாடல்களையும் ஒரே பாடகியைக் கொண்டு பாட வைத்தது, ‘கும்மிப்பாட்டு’ படத்தில்தான். அதில் வரும் 6 பாடல்களுக்கும் குரல் ஸ்வர்ணலதாதான்!
ரஹ்மானின் கருத்தம்மா படத்தில் இவர் பாடிய போறாளே பொன்னுத்தாயி, அலைபாயுதேவில் இவர் பாடிய மித மெல்லிய சோகப்பாடலான எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் கரையாத மனதையும் கரைய வைத்து விடும்.அமைதியாகி அமர்கிறது. `முக்காலா முக்காபுலா’, `குளிருது குளிருது’, `காதெலெனும் தேர்வெழுதி’, `மெல்லிசையே’,`காதல் யோகி’,`எவனோ ஒருவன்’ என ரஹ்மான்- ஸ்வர்ணலதா கொடுத்த ஹிட் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்..
கீ போர்ட், ஹார்மோனியம் வாசிக்கும் திறமை…
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகள்…
தேசிய விருது என பெற்றிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயரமானது.
தாய்-தந்தையரை சிறுவயதிலேயே இழந்தார்.
அமைதியான சுபாவம், எவரிடமும் பேசிக்கொள்ளாத தனிமை விரும்பி..
மிகப்பெரிய குடும்பத்தை தனது வருமானத்தால் மட்டுமே காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.
உச்சத்தை பிடிக்க தெரிந்த அவரால், கடைசிவரை திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய முடியாமலேயே போய்விட்டது. இதில் நோயும் பீடிக்க தொடங்கியது.
இயற்கை ஆளை பார்த்து நோயை தருமா என்ன?
சுவாசப் பிரச்சனையும் மூச்சுவிடுவதில் சிரமமும் அவரை நெடு நாட்களாக வாட்டியது. மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தாலும், என்ன நோய் என்று மருத்துவர்களால் சரியாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியவில்லை.
உலகையே மயக்கிய குரலழகி ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்குத் தள்ளபட்டார். அவருக்கு வந்திருப்பது Idiopathic Pulmonnary Fibrosis எனும் வினோத நோய் என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
நுரையீரலுக்கு செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தும் நோய் அது. வீடும் மருத்துவமனையுமே கதி என்று தன்னுடைய இறுதிக் காலங்களை கழித்த ஸ்வர்ணலாதா 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 37 வயதில் இயற்கை எய்தினார். காற்றின் அலைகளாய் நம்மை ஆட்கொண்ட குரல் அன்று காற்றில் கரைந்தது.
இசையை
தவிர வேறேதும் அறியாமல்…
தனக்கென
குடும்பம், குழந்தை என எதையும் ஏற்படுத்தி கொள்ளாமல்..
இசைக்காகவே பிறந்து, இசையிலேயே வாழ்ந்து இசையோடவே மறைந்து..
காற்றோடு கரைந்து போன #ஹம்மிங்குயின் #ஸ்வர்ணலதா நினைவு தினம் இன்று.
உலகையே மயக்கிய குரலழகி
By
Posted on