எதிர்க்கட்சிகள் சொல்வதை போல இது பெரிய பேரழிவை விவசாயத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. விவசாயிகளை குழப்புகின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்
லஞ்சமோ லஞ்சம்
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே, நெல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் உடனடியாக கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் அந்த கொள்முதலில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு விவசாயின் நெல்லையும் கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்வதில்லை. ஊழல் லஞ்சம் முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் களையப்பட வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு உணவுப் பொருள் என்று நிரூபிக்கும் நபர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களை மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள் என கூறினார்.