பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது நலமுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சித்து பங்கேற்றார். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதன்பிறகு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பிற்பகல் போராட்டத்தைத் தொடர அவர் ஹரியாணா மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.