சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய கூட்டங்களில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்துகிறார்.
நேற்று முதல் அமைச்சரை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று ஓ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்துகிறார்.