மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய சீர்திருத்த மசோதாக்களும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடு, ஒரே நாடு ஒரே சந்தை நோக்கி நகர்கிறது என்று அவர் கூறினார். இது விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் ஒரு தொலைநோக்கு நடவடிக்கை என்று அவர் கூறினார்.
அமைச்சர் நேற்று கோவா பனாஜியில் உள்ள செயலகத்தில் ஊடகங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அனைத்து தொழில்துறை உற்பத்திகளுக்கும், விற்பனை விலை உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்படுகிறது, ஆனால் விவசாய விளைபொருட்களைப் பொறுத்தவரை, விற்பனை விலை முகவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும் இப்போது இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, விவசாயியாக இருக்கும் தயாரிப்பாளருக்கு விற்பனை விலையை தீர்மானிக்க முன்னுரிமை இருக்கும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நேரடியாகச் செல்லும் உற்பத்திகளுக்கு சிறந்த விலையைப் பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
திரு. ஜவடேகர் மேலும் கூறுகையில், விவசாயிகளுக்கு இப்போது கிடைக்கக்கூடிய அல்லது வழங்கப்படும் மிக உயர்ந்த விலையில் விற்க சுதந்திரம் உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை போகாது. மாறாக, அரசாங்கம் விவசாயிகளுக்கு மிக அதிகமான எம்.எஸ்.பி செலுத்தியுள்ளது, என்றார். வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம், அவர்கள் விரும்பியவர்களுக்கு விற்கலாம் என்று திரு ஜவடேகர் கூறினார். புதிதாக இயற்றப்பட்ட விவசாய சட்டங்கள் தொடர்பாக அரசியலுக்கு இரையாக வேண்டாம் என்று கோவா விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார்,