லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்திய கடற்படைகளும் ஜப்பான் கடற்படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவை 5 கட்டங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன
ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை செப்., 26 துவங்கியது. வடக்கு அரபிக்கடல் பகுதியில் நடந்த இப்பயிற்சியின் நான்காவது கட்டத்தில் இரு நாட்டினைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
இந்தியாவின் சென்னை தர்க்காஷ், தீபக் போர்க்கப்பல்களும், ஜப்பான் நாட்டின் இகாசுச்சி, காகா போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. பயிற்சி இன்றுடன் (செப்.,28) நிறைவு பெறுகிறது. 5ம் கட்டப் பயிற்சி வரும் அக்., மாதம் விசாகப்பட்டினம் அருகே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.