பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று காணொளிக் காட்சி மூலம், கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதற்கான திட்டம், தற்போதைய நிலவரம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான கலந்துரையாடலை நடத்தினார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அம்மாநிலத்தின் சார்பில் பங்கேற்றார். டீம் இந்தியாவின் கூட்டு முயற்சி தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒவ்வொருவரும் காட்டிய பெரும் ஒத்துழைப்பு மற்றும் இந்தியா முழுமையும் ஒரே குழுவாக பணியாற்றியது பாராட்டத்தக்கது என பிரதமர் தெரிவித்தார். மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் அழுத்தம் குறித்து அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 10 மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த 10 மாநிலங்களில் தொற்று முறியடிக்கப்படுமானால், தொற்றுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் வெற்றி பெற்று விடும் என்று அவர் கூறினார். சோதனைகள் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு நாட்டில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து, தற்போது சுமார் 7 லட்சத்தை எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர், இந்த நடவடிக்கை, நோய்த்தொற்றை முன்னதாகவே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவியுள்ளது என்றார். நாட்டின் சராசாரி இறப்பு விகிதம், மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு. அது தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது என்றும், இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டு வரும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சோதனை வசதிகளை அதிகரிப்பது அவசர அவசியம் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நோயைக் கட்டுப்படுத்துதல், தொடர்பைக் கண்டறிதல், கண்காணிப்பு ஆகியவை இந்தப் போரில் திறன் வாய்ந்த ஆயுதங்களாகும் என அவர் கூறினார். மக்கள் விழிப்புணர்வு பெற்று, இத்தகைய முயற்சிகளுக்கு உதவி வருகின்றனர். இதன் பலனாக, வீட்டுக்குள் தனிமைப்படுத்துதலை நம்மால் வெற்றிகரமாக திறம்பட செய்ய முடிந்துள்ளது. ஆரோக்கிய சேது செயலியின் பயன் குறித்து குறிப்பிட்ட அவர், நோய் பாதிப்பை 72 மணி நேரத்துக்குள் கண்டறிய முடிந்தால், தொற்று பரவும் வேகத்தை பெருமளவில் குறைக்கமுடியும் என நிபுணர்கள் கூறுவதாக குறிப்பிட்டார். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, 72 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது ஒரு மந்திரத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், அதே ஆர்வத்துடன், கைகளைக் கழுவுதல், இரு நபர்களுக்கு இடையே போதிய இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசங்களை அணிதல் போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட உத்தி தில்லி, அண்டை மாநிலங்களில் தொற்றை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக சமாளிக்க உள்துறை அமைச்சர் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அனுபவத்தை பிரதமர் விளக்கினார் இந்த உத்தியின் முக்கிய தூண்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பிரித்தல், சோதனைகளில் குறிப்பாக, உயர் அபாயப் பிரிவினரிடம் கவனம் செலுத்துதல் ஆகியவையாகும் என அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளின் பலன் கண் கூடாகத் தெரிந்தது என்றும், மருத்துவமனைகளில் சிறந்த மேலாண்மை, தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகளை அதிகரித்தல் ஆகியவையும் பேருதவியாக இருந்தன என்பது நிரூபணமானதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர்கள் உரை முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் நிலவும் கள நிலவரம் பற்றி தெரிவித்தனர். தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வெற்றிகரமான மேலாண்மைக்கு பிரதமரின் தலைமை தான் காரணம் எனப் பாராட்டு தெரிவித்த அவர்கள், அவரது நிலையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். சோதனைகள் நடத்தப்பட்டு வருவது, சோதனைகளை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், தொலைதூர மருத்துவத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்பை அதிகரித்தல் ஆகியவை குறித்து அவர்கள் உரையாற்றினர். கண்காணிப்பைப் பலப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள், நாட்டில் ஒருங்கிணைந்த மருத்துவ உள்கட்டமைப்பை அமைக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர். உலக சுகாதார அமைப்பின் பாராட்டு தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக அவர் கூறினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகச் செயலர், நாட்டில் கோவிட் பாதிப்பு குறித்து விளக்கினார். நாட்டின் சராசரி தொற்று விகிதத்தை விட சில மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சோதனை வளர்ச்சிகளை அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை உள்ளூர் சமுதாயத்தினரின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், உள்துறை இணையமைச்சர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க! இந்த ஒலி, கடவுள் ராமரின் நகரமான அயோத்தியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஒலிக்கிறது. இந்த பெருமைவாய்ந்த தருணத்தில், கடவுள் ராமரின் தீவிர பக்தர்களுக்கும், எனது அருமை நாட்டு மக்களுக்கும், பல்வேறு கண்டங்களிலும் பரவியிருக்கும் கோடிக்கணக்கான இந்திய குடிமக்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆர்வமுள்ள, தீவிரமாக செயல்படும் மற்றும் பாராட்டத்தக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, பரம்புஜ்ய மகந்த் நிரித்ய கோபால் தாஸ் மகாராஜ் அவர்களே, எனது பெருமதிப்பிற்குரிய திரு.மோகன் ராவ் பகவத் அவர்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எளிமையின் வடிவங்களான மாபெரும் சாதுக்கள் மற்றும் ஆசான்களே மற்றும் எனது அருமை இந்தியர்களே! அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அற்புதமான மற்றும் வரலாற்றுப்பூர்வமான நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்காக அறக்கட்டளைக்கு நான் கடன்பட்டுள்ளேன். உண்மையில், இது நாம் தவற விடும் நிகழ்ச்சியில்லை. “ राम काजु कीन्हे बिनु मोहि कहाँ बिश्राम॥ (Ram Kaju keenhe Mohi KahanVishram)” என்று நாம் கூறுவோம். அதாவது, “கடவுள் ராமர் அளித்த பணியை நிறைவேற்றாமல் நான் எவ்வாறு ஓய்வெடுப்பேன்” என்பது இதன் பொருள். கடவுள் பாஸ்கரின் ஆசியால், அற்புதமான சரயு நதிக்கரையில் பொன்னான வரலாற்றுப்பூர்வமான தருணத்தை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த நீளத்திலும், மனதிலும், கன்னியாகுமரி முதல் ஷீர் பவானி வரை, கோட்டேஸ்வர் முதல் காமக்யா வரை, ஜெகன்னாதர் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் வரை, சமேத் ஷிகர் முதல் ஷ்ராவன் பெலகோலா வரை, புத்தகயா முதல் சாரனாத் வரை, அமிர்தசரஸ் முதல் பாட்னா சாகிப் வரை, அந்தமான் முதல் அஜ்மீர் வரை, லட்சத்தீவு முதல் லே வரை, ஒட்டுமொத்த நாடும் கடவுள் ராமரால் சூழப்பட்டுள்ளது! ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு இதயமும் மின்னுகிறது. ஒட்டுமொத்த நாடுமே உணர்வுப்பூர்வமாக உணர்கிறது. வரலாற்றின் ஓர் அங்கமாக இருப்பதற்கு பெருமைகொள்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தை கண்டுகளிக்கிறது. நூற்றாண்டு கால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தங்களது வாழ்நாளில் இதுபோன்ற தருணத்தின் ஒரு அங்கமாக இருப்போம் என்று கோடிக்கணக்கான இந்தியர்களால் நம்பியிருக்க முடியாது என்று என்னால் உறுதியாக கூற முடியும். மகளிரே மற்றும் ஆடவர்களே, சிறப்பு விருந்தினர்களே, பல ஆண்டுகளாக இருந்த தற்காலிக கூடாரத்திலிருந்து கடவுள் ராமரை மாற்றி, அவருக்கு உரிய கோயில் வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. நமது கடவுள் ராமருக்கு தற்போது மிகப்பெரும் கோயில் கட்டப்பட உள்ளது. இன்று, நூற்றாண்டு கால அழிவு மற்றும் உயிர்த்தெழுதல் நிகழ்வுகளிலிருந்து ராம ஜென்மபூமிக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. என்னுடன் இணைந்து குரல் எழுப்புங்கள்…. கடவுள் ராமர் வாழ்க, கடவுள் ராமர் வாழ்க. நண்பர்களே, நமது சுதந்திரப் போராட்டத்தின்போது, பல்வேறு சந்ததிகள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டன. அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில், சுதந்திரத்துக்கான இயக்கம் இல்லாமல் இருந்ததில்லை. நாட்டில் சுதந்திரத்துக்காக தியாகம் செய்யாத பகுதி என்று எதுவுமே இல்லை. சுதந்திரத்துக்கான தீவிர ஏக்கம் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தின் உருவகமாக ஆகஸ்ட் 15 திகழ்கிறது. இதேபோல, ராமர் கோயில் கட்டுவதற்காக பல்வேறு சந்ததிகளும், பல நூற்றாண்டுகளாக தன்னலமற்ற தியாகங்களைச் செய்துள்ளன. நூற்றாண்டுகால தவம், தியாகம் மற்றும் உறுதி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தின்போது, தியாகம், அர்ப்பணிப்பு, உறுதி ஆகியவை இருந்தன. அவர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தால் அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் சார்பாக, அவர்களின் முன்பு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்தாலேயே இன்று ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான புனிதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த நிகழ்ச்சியை இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதுடன், இந்த தருணத்தில் ஆசி வழங்குகின்றனர். நண்பர்களே, நமது மனங்களில் கடவுள் ராமர் நுழைந்துவிட்டார். எந்தவொரு பணியை நாம் மேற்கொள்ளும்போதும், ஊக்கத்தை அளிப்பதற்காக கடவுள் ராமரை எதிர்பார்க்கிறோம். கடவுள் ராமரின் தனித்துவமான சக்தியைப் பாருங்கள். கட்டிடங்கள் சேதமடைந்தன, இருப்பை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன… ஆனால், கடவுள் ராமர், நமது மனங்களில் முழுமையாக நிரம்பியுள்ளார். நமது கலாச்சாரத்தின் அடிப்படையே கடவுள் ராமர்; அவர்தான் இந்தியாவின் கவுரவம். அவர்தான் கவுரவத்தை உருவாக்கியுள்ளார். இந்த அற்புதத்துடனேயே ராமரின் மாபெரும் கோயிலுக்கான பூமிபூஜை விழா நடைபெற்றுள்ளது....