நேர்மையான முதலீட்டாளர்களிடம் இருந்து நம்பகமான பங்குதாரர்களைப் பெற இந்தியாவும், ஜப்பானும் எதிர்நோக்கியுள்ளன என்று வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் கூறினார். இன்வெஸ்ட் இந்தியாவின் பிரத்யேக முதலீட்டு மன்றம்- ஜப்பான் பதிப்பின் மூன்றாவது கூட்டத்தில் காணொளிக் காட்சி (டிஜிட்டல் கண்காட்சி) மூலம் ஜப்பானிய நிறுவனங்களிடையே பேசிய அவர், ஜப்பானும், இந்தியாவும் வர்த்தக மற்றும் தொழில் உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது முக்கியம் என்றார். “எந்தச் சவாலையும் நாம் சமாளித்து முன்னேறி வருவோம் என்றும் புவி-அரசியல், முலோபாய பிரச்சினைகள் ஆகியவை வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில் ஆகிய எந்த வழியில் வந்தாலும் நாம் வெற்றி பெறுவோம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நான் நம்புகிறேன். மிக முக்கியமாக, ஜப்பான் ஒரு மிகவும் முக்கியமான மற்றும் நம்பத்தகுந்த தொழில் பங்குதாரராகும்,” என்று அவர் கூறினார். “கோவிட்-19-இன் பிடியில் இருந்து உலகம் விடுபட்டிருக்கும் வேளையில், வர்த்தகத் தொடர்ச்சிக்கு மட்டுமில்லாமல், உலக முதலீட்டாளர்கள் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும், யுக்திகளையும் செயல் திட்டங்களையும் இந்தியா வகுத்து வருகிறது,” என்று அமைச்சர் கூறினார். தற்போதைய சூழ்நிலையை மிகப்பெரிய வாய்ப்பாக மாற்ற அரசு எடுத்த பெரிய நடவடிக்கைகளில் ஒன்று சமீபத்தில் செய்யப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் என்று கூறிய அவர், உலக வங்கியின் தொழில் செய்வதற்கு எளிதான நாடுகளின் பட்டியலில் கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி இருப்பது இதைப் பிரதிபலிக்கிறது என்றார். இதற்காக இந்திய அரசும், மாநில அரசுகளும் நிறைய கொள்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்தியா-ஜப்பானுக்கிடையேயான நெருங்கிய உறவைப் பற்றி பேசிய திரு. கோயல், பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளும் பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார். இந்தியா மற்றும் ஜப்பானுக்கிடையேயான பொருளாதார உறவுகள் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியங்களை கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார். “இந்தியாவின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் சந்தை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவின் மீதான ஜப்பானின் ஆர்வம் வளர்ந்து வருகிறது. அதன் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் எண்ணிக்கை ஜப்பானிய முதலீட்டுகளுக்கான விரும்பத்தகுந்த இடமாக இந்தியாவை ஆக்கியுள்ளது. 1400 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் செயல்பட இருக்கின்றன. 5000 தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் நல்ல முறையில் நடத்தப்பட்டு 10000 ஜப்பானிய சகோதர சகோதரிகள் நிறைவான மற்றும் உற்பத்தித் திறன் மிக்க வாழ்வை இந்தியாவில் வாழ்கிறார்கள்.” ஜப்பானிய அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு. ஹிரோஷி கஜியாமா பேசுகையில், இரு நாட்டு உறவை இன்னும் மேம்படுத்த தன்னுடைய நாடு ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க! இந்த ஒலி, கடவுள் ராமரின் நகரமான அயோத்தியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஒலிக்கிறது. இந்த பெருமைவாய்ந்த தருணத்தில், கடவுள் ராமரின் தீவிர பக்தர்களுக்கும், எனது அருமை நாட்டு மக்களுக்கும், பல்வேறு கண்டங்களிலும் பரவியிருக்கும் கோடிக்கணக்கான இந்திய குடிமக்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆர்வமுள்ள, தீவிரமாக செயல்படும் மற்றும் பாராட்டத்தக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, பரம்புஜ்ய மகந்த் நிரித்ய கோபால் தாஸ் மகாராஜ் அவர்களே, எனது பெருமதிப்பிற்குரிய திரு.மோகன் ராவ் பகவத் அவர்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எளிமையின் வடிவங்களான மாபெரும் சாதுக்கள் மற்றும் ஆசான்களே மற்றும் எனது அருமை இந்தியர்களே! அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அற்புதமான மற்றும் வரலாற்றுப்பூர்வமான நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்காக அறக்கட்டளைக்கு நான் கடன்பட்டுள்ளேன். உண்மையில், இது நாம் தவற விடும் நிகழ்ச்சியில்லை. “ राम काजु कीन्हे बिनु मोहि कहाँ बिश्राम॥ (Ram Kaju keenhe Mohi KahanVishram)” என்று நாம் கூறுவோம். அதாவது, “கடவுள் ராமர் அளித்த பணியை நிறைவேற்றாமல் நான் எவ்வாறு ஓய்வெடுப்பேன்” என்பது இதன் பொருள். கடவுள் பாஸ்கரின் ஆசியால், அற்புதமான சரயு நதிக்கரையில் பொன்னான வரலாற்றுப்பூர்வமான தருணத்தை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த நீளத்திலும், மனதிலும், கன்னியாகுமரி முதல் ஷீர் பவானி வரை, கோட்டேஸ்வர் முதல் காமக்யா வரை, ஜெகன்னாதர் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் வரை, சமேத் ஷிகர் முதல் ஷ்ராவன் பெலகோலா வரை, புத்தகயா முதல் சாரனாத் வரை, அமிர்தசரஸ் முதல் பாட்னா சாகிப் வரை, அந்தமான் முதல் அஜ்மீர் வரை, லட்சத்தீவு முதல் லே வரை, ஒட்டுமொத்த நாடும் கடவுள் ராமரால் சூழப்பட்டுள்ளது! ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு இதயமும் மின்னுகிறது. ஒட்டுமொத்த நாடுமே உணர்வுப்பூர்வமாக உணர்கிறது. வரலாற்றின் ஓர் அங்கமாக இருப்பதற்கு பெருமைகொள்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தை கண்டுகளிக்கிறது. நூற்றாண்டு கால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தங்களது வாழ்நாளில் இதுபோன்ற தருணத்தின் ஒரு அங்கமாக இருப்போம் என்று கோடிக்கணக்கான இந்தியர்களால் நம்பியிருக்க முடியாது என்று என்னால் உறுதியாக கூற முடியும். மகளிரே மற்றும் ஆடவர்களே, சிறப்பு விருந்தினர்களே, பல ஆண்டுகளாக இருந்த தற்காலிக கூடாரத்திலிருந்து கடவுள் ராமரை மாற்றி, அவருக்கு உரிய கோயில் வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. நமது கடவுள் ராமருக்கு தற்போது மிகப்பெரும் கோயில் கட்டப்பட உள்ளது. இன்று, நூற்றாண்டு கால அழிவு மற்றும் உயிர்த்தெழுதல் நிகழ்வுகளிலிருந்து ராம ஜென்மபூமிக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. என்னுடன் இணைந்து குரல் எழுப்புங்கள்…. கடவுள் ராமர் வாழ்க, கடவுள் ராமர் வாழ்க. நண்பர்களே, நமது சுதந்திரப் போராட்டத்தின்போது, பல்வேறு சந்ததிகள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டன. அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில், சுதந்திரத்துக்கான இயக்கம் இல்லாமல் இருந்ததில்லை. நாட்டில் சுதந்திரத்துக்காக தியாகம் செய்யாத பகுதி என்று எதுவுமே இல்லை. சுதந்திரத்துக்கான தீவிர ஏக்கம் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தின் உருவகமாக ஆகஸ்ட் 15 திகழ்கிறது. இதேபோல, ராமர் கோயில் கட்டுவதற்காக பல்வேறு சந்ததிகளும், பல நூற்றாண்டுகளாக தன்னலமற்ற தியாகங்களைச் செய்துள்ளன. நூற்றாண்டுகால தவம், தியாகம் மற்றும் உறுதி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தின்போது, தியாகம், அர்ப்பணிப்பு, உறுதி ஆகியவை இருந்தன. அவர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தால் அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் சார்பாக, அவர்களின் முன்பு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்தாலேயே இன்று ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான புனிதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த நிகழ்ச்சியை இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதுடன், இந்த தருணத்தில் ஆசி வழங்குகின்றனர். நண்பர்களே, நமது மனங்களில் கடவுள் ராமர் நுழைந்துவிட்டார். எந்தவொரு பணியை நாம் மேற்கொள்ளும்போதும், ஊக்கத்தை அளிப்பதற்காக கடவுள் ராமரை எதிர்பார்க்கிறோம். கடவுள் ராமரின் தனித்துவமான சக்தியைப் பாருங்கள். கட்டிடங்கள் சேதமடைந்தன, இருப்பை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன… ஆனால், கடவுள் ராமர், நமது மனங்களில் முழுமையாக நிரம்பியுள்ளார். நமது கலாச்சாரத்தின் அடிப்படையே கடவுள் ராமர்; அவர்தான் இந்தியாவின் கவுரவம். அவர்தான் கவுரவத்தை உருவாக்கியுள்ளார். இந்த அற்புதத்துடனேயே ராமரின் மாபெரும் கோயிலுக்கான பூமிபூஜை விழா நடைபெற்றுள்ளது....