இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சுமார் 35 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் நிகழ்ச்சியில் புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து மாணவர்கள் மற்றும் நாட்டு மக்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்புரையாற்றினார்.
இந்தியாவில் மாணவர்களுக்கான கல்வியைத் தரமாக வழங்குவதில் நானும், எனது தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருகிறது. நம் கல்வி முறையை மிகவும் முன்னேற்றமாகவும் மற்றும் காலத்திற்கு ஏற்றார் போல் நவீனமாகவும் மாற்றுவதே எங்களின் முக்கிய முயற்சி.
மேலும் 21-ம் நூற்றாண்டு கற்றல், ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கான சிறந்த நேரம் இது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020 இதைச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு சில அரசியல் கட்சிகள் இதில் உள்ள சிறப்புக்களை அறியாமல் அவர்கள் சுய லாபத்திற்காக வேண்டும் என்றே ஏதிர்கிறார்கள், அப்படி செய்பவர்கள் அனைவருக்கும் எதிர்கால மாணவர்கள் மீது துளியும் அக்கறை இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
புதியதாக அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி கனவுகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை என்பது பள்ளிகளுக்கு அப்பாற்பட்டது. மாணவர்களைப் புத்தகப் பையின் சுமையிலிருந்து விடுவித்து வாழ்கைக்கு உதவும் வகையில் கற்பிக்கும். மேலும் மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி மாணவர்களை விமர்சன சிந்தனையை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.
இந்தக் கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தியமொழிகள் மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்திய மாணவர்களின் அறிவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது நம் நாட்டின் ஒற்றுமையையும் மற்றும் நாட்டுப்பற்றையும் அதிகரிக்கும்.
ஒரு பாடத்திட்டத்தில் பல்வேறு தொகுதிகளிலிருந்து பாடங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பின்னர் அறிவியல், வர்த்தகம், மனிதநேயம் அல்லது தொழில் போன்ற எந்தவொரு தொகுதியிலிருந்தும் பாடங்களைத் தேர்வு செய்ய முடியும்.
மேலும் இந்தக் கல்விக்கொள்கை மக்கள், மாணவர்களின் பண்புகள் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டது. கற்றல், கேள்வி கேட்பது மற்றும் தீர்வு இந்த மூன்று விஷயங்களையும் ஒருபோதும் மாணவர்கள் நிறுத்தக் கூடாது. கற்கும்போது நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள், கேள்வி கேட்கும்போது ஒரு செயலைத் தாண்டி சிந்தனை செய்து அதற்கான வழியையும் கண்டுபிடிக்கிறீர்கள். ஆகவே இந்தப் புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் நலனுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துத் துறையைச் சேர்ந்த அறிஞர்களுடன் கலந்துரையாடி நன்கு ஆறாயிந்து பின்னர் இந்தப் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாகப் பல்வேறு சிறப்புக்களை எடுத்துரைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.