வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நேற்று நடந்தேறியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டன.
1948ல் உருவாகிய இஸ்ரேல் தேசத்தை அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இதுவரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை கொண்டிருக்கவில்லை.
60களில் எகிப்தும், 80களில் ஜோர்டானும் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து அந்நாட்டுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டன.
அதன் பிறகு தற்போது 2020ல் இஸ்ரேலை அகீகரித்து அதனுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி -க்கொண்டிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.
இஸ்ரேலை அங்கீகரித்த முதல் வளைகுடா நாடு மற்றும் மூன்றாவது இஸ்லாமிய நாடு UAE.
இஸ்ரேல் ‘பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ள மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என UAE விதித்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக UAE அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இதுநாள்வரை எந்த அரபு நாடுகளுக்கும் வர முடியாத சூழல் இருந்தது. அந்த நடைமுறைகளை இனி UAE தளர்த்திக்கொள்ளும்.
மெக்கா, மதீனாவிற்கு அடுத்து இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புனித தளமாக இருக்கும் ‘அல் அக்ஸா’ மசூதிக்கு இனி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் புனித பயணம் வர அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அல் அக்ஸா மசூதி ஜெருசலேமில் உள்ளது.
கல்வி, மருத்துவம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, இரு நாடுகளும் பரஸ்பரம் முதலீடுகளை இரு நாடுகளிலும் செய்து கொள்வது போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
மத்திய கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் இவ்விரு நாடுகளின் அமைதி ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியுள்ளது.
geopolitics பார்வையில் இந்த ஒப்பந்தம் ஈரான் மற்றும் துருக்கியை கோபப்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இந்த அமைதி ஒப்பந்த விவகாரத்தில் ஏக கடுப்பில் உள்ளது.